districts

செய்கைகோள் நகரத்திற்கு நிலம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 21- கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே செயற்கைகோள் நகரம் (சாட்டிலைட் சிட்டி) வட்ட சாலை அமைக்க கையகப் படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க அரசு தாமதப்படுத்துவதாகக் கூறி ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்ட விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை அமைக்க கடந்த 5 ஆண்டுகளாக விவசாய நிலங்களை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தி வருகின்றனர். நிலத்திற்கான இழப்பீடு மிகக் குறைந்த அளவே வழங்கப்படு கிறது. அரசு அதிகாரிகள் பலரை மிரட்டியும் ஒரு சிலரை அழைத்து நிலத்தை ஒப்படைக்குமாறு கட்டாயமாக கையெழுத்து வாங்கியும் வருகின்றனர்.அரசு அதிகாரிகளின் இந்த அடக்கு முறை போக்கை கண்டித்து பலமுறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூன்று ஆட்சி யர்கள் மாறிவிட்டனர். ஆனால் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. நியாயமான இழப்பீடும்  வழங்கவில்லை. மேலும், முறையான அறி விப்புக் கடிதம் வழங்காமல் நிலத்தைக் கையகப்படுத்த தீவிரம் காட்டுகின்றனர். நிலத்தை வழங்காவிட்டால் நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்வோம் என்றும் மிரட்டுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் இழப்பீடு தொகை வந்தும், நிலம் எடுக்கப்பட்ட தற்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை வழங்க மறுக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடி யாக தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.