கிருஷ்ணகிரி,பிப் 27- தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் கேழ்வரகு (ராகி) பயிர் சாகுபடியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, சூளகிரி, ஓசூர், தளி, தேன்கனிக் கோட்டை, கிருஷ்ண கிரி, போச்சம்பள்ளி, பர்கூர் ஆகிய முக்கிய பகுதிகளில் விவ சாயிகள் சுமார் 45000 ஹெக்டேர் பரப்பளவில் இதன் பருவமான ஜூன், ஜூலை,டிசம்பர், ஜன வரி மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.ஒரு ஹெக்டே ருக்கு 1.5 டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இங்கு உற்பத்தியாகும் ராகி தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகிறது. பிஸ்கட், நூடுல்ஸ், முறுக்கு களி, கூழ் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள் தயாரிக்க வும், கோழி தீவனத்துக்கும் ராகி அதிகளவில் பயன்படுத்தப்படு கிறது. தற்போது, தமிழ்நாடு அரசு சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ராகியை கொள்முதல் செய்யும் பணியை தொடங்கியுள்ளது. இதனால் மாவட்டத்தில புதிய பகுதிகளிலும் விவசாயிகள் தற்போது நிலங்களை சீர் செய்து, ராகிசாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். இந்நிலையில், தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு 2 கிலோ அரிசிக்கு பதிலாக ராகி சிறு தானியம் விநி யோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக சூளகிரி, ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளியில் ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், நீலகிரி மாவட்டத்தின் ஓராண்டுக்கான தேவையான 11,040 மெட்ரிக் டன் ராகி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.தற்போது வரை கிணறுகள், ஏரிகள், குளம், குட்டைகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் நன்றாக உள்ளதாலும், விவ சாயிகள் ராகி பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இத னால் விவசாய சாகுபடிக்கான நில, பாசன பரப்பு மேலும் அதிகரிக்க நல்ல வாய்ப்பு உள்ளது என்று ராகி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் கூறுகின்றனர்.