ஓசூர்,அக்.5- ஒவ்வொரு ஆண்டும் முதலிடம் பெரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘அப்பாவும் பிள்ளை பொன்னம்மாள்’ அறக் கசட்டளை சார்பாக ஊக்குத் தொகை வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த முழு 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முத லிடம் பெற்ற ஓசூர் கல்வி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஓசூரில் நடைபெற்றது. அறக்கட்டளை இயக்கு நர் கே.ஏ.ஜோதி பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ. மனோகரன் முன்னிலை வகித்தார். பாகலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் முத லிடம் பெற்ற மாணவி சி.அருள்மொழி உட்பட 75 மாணவர்களுக்கு அதிய மான் பொறியியல் கல்லூரி நிறுவனர், முன்னாள் மக்களவைத் துணைத் தலைவர் முனை வர் மு.தம்பித்துரை அறக் கட்டளை சார்பில் ஊக்கத் தொகை வழங்கினார். பேரிகை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர சேகர் மாசிநாயக்கனப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் குபேரன் சமத்துவபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலப்பா ஓய்வு பெற்ற அலுவலர் பிரபாகர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.