கிருஷ்ணகிரி, பிப். 24- ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைமை மருத்துவர் சோமசேகர் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் தலைவரும், நிறுவனருமான மக்களவை உறுப்பினர் தம்பிதுரை தொடக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும், ஆராய்ச்சி நிறுவனத்தையும் திறந்து வைத்தனர். தொடர்ந்து 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான ஆணைகளை வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை தலைமை அறங்காவலர் பானுமதி, அறங்காவலர்கள் லஷ்யா, நம்ரதா, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் சுந்தரவேல், அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் மருத்துவர் ராஜா முத்தையா நன்றி கூறினார்.