districts

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி, மார்ச் 12- தாட்கோ மூலம் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற இலவச பயிற்சி வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி களை வழங்கி வருகிறது.  அதன் அடிப்படையில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11 ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வா ணையத்தால் நிரப்பப்பட வுள்ளது.  இந்த தேர்வில் ஆதிதிரா விடர், பழங்குடியின மாண வர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்க லாம்.  இத்தேர்விற்கு விண்ணப் பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது ஆகிய மூன்று முறைகளில் நடை பெறவுள்ளது. இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்ற பணி யாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணிய மர்த்த ப்படுவார்கள்.  இந்த தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.