districts

img

விலை வீழ்ச்சியால் முட்டைகோசுகளை ஏரியில் கொட்டும் விவசாயிகள்

கிருஷ்ணகிரி,பிப்.26- கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதி விவசாயிகள் காய்கறிகள், கீரை வகைகள் பயிரிட்டு வருகின்றனர். இந்தாண்டு தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் மாற்று பயிராக காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை அறுவடை செய்து ராயக்கோட்டையிலுள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.  இதனிடையே ராயக் கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  இவை தற்போது அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகள் மூட்டை, மூட்டையாக காய்கறி  சந்விதைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனால் முட்டைக்கோஸ் வரத்து அதி கரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.  ஒரு மூட்டை ரூ.200-க்கும், ஒரு கிலோ சிறிய முட்டைக்கோஸ் ரூ.4-க்கும், 2 கிலோ கொண்ட முட்டைக்கோஸ் ரூ.7-க்கும் விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் ஏரிகளில் கொட்டி செல்கின்றனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “ராய க்கோட்டை பகுதிக ளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் பயிரிடப் பட்டுள்ளது. தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் முட்டைக்கோஸ் சாகுபடி செய்த விவசாயிகள் ஏரிகளில் கொட்டி செல்கின்றனர். சிலர் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர் என்று கவலை யுடன் தெரிவித்தனர்.