districts

img

மாற்றுத்திறனாளி குழந்தைகள் தின விழா

மத்தூர், நவ. 27- கிருஷ்ணகிரி மாவட்டம்,இ ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தைகள் தின விழா நடைபெற்றது. மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையிலும், அவர்களின் தனி திறமைகளை வெளிக் கொண்டுவரும் விதத்திலும் சாதாரண மாணவர்களுடன் மாற்றுத்திறன் மாணவர்களும் ஒருங்கி ணைந்து கல்வி கற்று நாங்களும் சளைத்த வர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகை யில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. மாற்றுத்திறன் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றிடவும், சாதாரண மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கல்வி கற்கவும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் வட்டார மேற்பார்வையாளர் வசந்தி, ஆசிரியர், பயிற்றுனர் ஜெயமணி பாக்கியராஜ், ஆனந்தன், பிரபுராஜ்,  சிறப்பு பயிற்றுநர் காமாட்சி, சுரேஷ், ரமேஷ், பிரபாகரன், வைரம்மாள் பிசியோதெரபி ஆசிரியர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.