districts

img

வனவிலங்கு சரணாலயத்திற்காக நிலங்களை அழிப்பதா? விவசாயிகள் ஆவேசம்

கிருஷ்ணகிரி, நவ. 22- கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தேன்கனிக் கோட்டை யிலிருந்து பிரிக்கப்பட்டு தனி வட்டமாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகிறது. அடர்ந்த காடுகள் மலைப்பகுதிகளுக்குள் உள்ள இந்த சிறிய வட்டத்தில் பழங்குடி, மலைவாழ், இருளர், தலித் மக்கள் பெரும்பான்மையாகவும், பிற்படுத்தப்பட்ட மக்களும் வசிக்கின்றனர். 15 ஊராட்சிகளில் 165 சிறு சிறு கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயம், விவசாயக் கூலி வேலை, ஆடு, மாடு வளர்ப்பை தொழிலாக கொண்டுள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலி ருந்தே ஆடு, மாடுகளை மலைகளில் மேய்க்க அனுமதியும், பட்டி அமை ப்பதற்கான  அடையாள அட்டை வழங்கியிருந்தனர். ஆனால் இந்த உரிமைகளை வன அதிகாரிகள் முழுமையாக பரித்தனர். விவசாயம் செய்ய அனுமதிக்கவில்லை. கிராமங்களில் குடியிருக்க விடாமலும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பல கிராமங்களை காலி செய்யக் கோரி வனத்துறையினர் அடிக்கடி நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த 478 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான வனச் சரணால யம் என்பதை விரிவுபடுத்தி ஒன்றிய அரசும் 68,640  ஹெக்டர் நிலத்தில் 686.45 சதுர கிலொமீட்டர் பரப்பில் தற்பொழுது காவேரி தெற்கு வனவிலங்குகள் உயிரின சரணாலயம் அமைப்பதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

இந்நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகளை தற்போது மாநில, ஒன்றிய அரசுகள் துவக்கி யுள்ளது. இதனால் 2006இல் கொண்டுவரப்பட்ட வன உரிமை சட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு அஞ்செட்டி மக்கள் துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாநிலத் துணைத் தலைவர் பி.டில்லிபாபு, துணைச் செயலாளர் பெருமாள், மாவட்டத் தலைவர் முருகேஷ், பொருளாளர் எம்.எம். ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பி னர்கள் சேகர், இருதயராஜ், சி.பி.ஜேயராமன் அகியோர் பேசினர். இது குறித்து டில்லிபாபு செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பெண்ணாகரம், பாலக்கோடு, அஞ்செட்டி, தேன்கனி க்கோட்டை, ஜவளகிரி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கி காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம் 686.45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்க இருப்பதாக ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டு அதற்கான ஆயத்த வேலைகளை துவங்கியுள்ளனர்.  

அஞ்செட்டி வட்டத்திற்குட்பட்ட 165 கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றி வருகிறார்கள். வீடுகளை தீயிட்டு கொளுத்துவது, ஆடு மாடுகளை வன சரகத்துக்குள் அனுமதிக்க மறுப்பது, பட்டி போட தடை விதிப்பது, வெடிகள் வைத்து ஆடு, மாடுகளை விரட்டுவது, அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைத்துரூ. 500, 1000 என்று தண்டம் வசூலிப்பது, விவசாயிகள் மீது பொய் வழக்குகளை போடுவது என்று கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். 2006 வன உரிமை சட்டம் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து உரிமை களையும் வழங்கியுள்ள நிலையில் இதுபோன்று அடா வடியாக செயல்படுவது கண்ட னத்துக்குரியது.  காவேரி தெற்கு வன உயிரியல் காப்பகம் அமைக்கப்படும் என கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு 79 நாட்கள் கடந்த நிலையில், எந்த அறிவிப்பும் செய்யாமல் ஆயத்த பணிகளை துவங்கியிருப்பது மலை மக்களின் அடிப்படைவாழ்வுரிமைகளை முற்றிலும் அழிக்கும் செயலாகும்.  கடந்த 25 ஆண்டுகளில் 18 லட்சம் மலைவாழ் மக்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 22 லட்சம் மக்களுக்கு பட்டா கொடுக்கப்பட வேண்டி யுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ள நிலையில், அஞ்செட்டி மலைவாழ் பழங்குடி தலித் மக்களின் வாழ்க்கையை அழித்து வனவிலங்கு சரணாலயம் அமைப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் பேருந்து நிலையத்திலி  ருந்து ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிப்பதாக தெரி வித்துள்ளார்.