districts

img

3 மடங்கு உயர்த்தப்பட்ட குடிநீர் வரி, சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 480 இல் இருந்து 1500 ரூபாயாக 3 மடங்கு உயர்த்தப்பட்ட குடிநீர் வரி, சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துரை தலைமையில் ராம் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம், வணிகர் சங்க முன்னாள் தலைவர் தாமஸ் ஜான், ஓசூர் கட்டுமான நிறுவனங்கள், பொறியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் பிரேமா, ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.