கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியிலி ருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையையொட்டி சிறுவர் பூங்கா, சீசா பலகைகள், ஊஞ்சல்கள், சறுக்கு மரம் தரை ராட்டினமும் அமைக்கப்பட்டது. ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டம் மற்றும் சூளகிரியை சுற்றியுள்ள பகுதி களிலிருந்து விடுமுறை நாட்களில் மாண வர்கள், பொதுமக்கள் வந்து சென்றனர். கடந்த 10 ஆண்டுகளாக அணையும், பூங்காவும் பரா மரிக்கப்படாததால் சிறுவர் பூங்காவில் புதர் மண்டியது. செடிகொடிகளும் மரமாக வளர்ந்துவிட்டது. இதனால், சிறு வர்களுக்கான விளையாட்டு உபகர ணங்கள் அனைத்தும் உடைந்தும் பூங்கா இருந்ததற்கான தடயம் கூட தெரியாத நிலையில் உள்ளது. பத்து ஆண்டுகாலமாக அணையும், நீர்வரத்து கால்வாயும் பராமரிக்காமல் கிடப்பில்போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதுமுள்ள ஏரிகள் அனைத்தும் நீர் நிறைந்துள்ள நிலையில் சின்னாறு அணை யில் தண்ணீர் இல்லை. எனவே சின்னாறு அணைக்கான நீர் வரத்து கால்வாய்களை சீர்படுத்தி பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.