districts

img

தலித், பழங்குடி மாணவிகளுக்கு விடுதி: வாலிபர் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி, நவ. 2- பர்கூர் வட்ட அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திருப்பத்தூர், ஊத்தங்கரை, ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  பழங்குடி, மலைவாழ், தலித் மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்ற னர். இந்த பகுதிகளில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால், பல மாணவிகளின் படிப்பு பாதியில் இடைநிற்றல் ஏற்பட்டு வரு கிறது. மேலும் போதுமான அரசு விடுதியில்  வசதிகள் இல்லாததால் புதிதாக மாணவிகள்  கல்லூரியில் சேர்வதற்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. இந்நிலையில் பர்கூர் அரசு மகளிர்  கலைக் கல்லூரியில் முதல் தலைமுறையாக முதலாம் ஆண்டு படிக்கும் 20க்கும் மேற்பட்ட ஜவ்வாது மலைப்பகுதியில் இருந்து வரும் பழங்குடி மாணவிகள் அரசு விடுதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடமும், ஆதிதிராவிட, பழங்குடி நலத்துறையிடமும்  விண்ணப்பித்திருந்தனர். 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அரசின் இலவச விடுதி யில் இடம் கிடைக்காத நிலையில் சில மாதங்களாக மாதம் 2500க்கு மேல் செலவு செய்து தனியார் விடுதிகளில் தங்கி  கல்லூரிக்கு சென்று வருகின்றனர். தொடர்ந்து செலவு செய்து விடுதியில் தங்க  முடியாததால் மாணவிகள் கல்லூரி படிப்பை  தொடர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அரசின் இலவச விடுதி வசதி செய்து தர வேண்டும் என 20க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனித் தனியாக மனு அளித்தனர். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இளவரசன் கூடுதலாக அரசு இலவச விடுதி  வசதியை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட  ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்ததுடன், அங்கு வந்திருந்த பர்கூர் சட்டமன்ற உறுப்பி னர் மதியழகனிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் நடவடிக்கை  எடுப்பதாக மாணவிகளிடம் உறுதிய ளித்தார்.