கிருஷ்ணகிரி, டிச. 17- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சிங்காரப் பேட்டை ஜவ்வாது மலை அடிவாரத்தில் அங்குத்தி சுனை உள்ளது. இந்த சுனை, கரடு முரடான பாறைகளும், பள்ளமும் உள்ள தால் இதில் குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவ தால் அங்குத்தி சுனையில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில் கோவிந்தன் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சுனையை பார்வையிட சென்றுள் ளார். அப்போது அங்கிருந்த பாறையில் வழுக்கி கோவிந்தன் சுனையில் விழுந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்துளைனர். சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் பாறைக்கு அடியில் சிக்கியிருந்த கோவிந்தனை சடலமாக மீட்டனர்.