கிருஷ்ணகிரி, பிப். 25- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை உத்தனப்பள்ளி அருகில் மலைகளுக்குள் 4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது ஓபே பாளையம். கொம்மேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இங்கு 175 குடும்பங்கள் 3 தலைமுறைகளுக்கு மேலாக வசிக்கின்றன. பிரதான சாலையிலிருந்து கெல மங்கலம் வரை செல்லும் 15 கிலோ மீட்டர் சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக் காணப்படுகிறது. இதற்கு காரணம், இந்த மலைப்பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட குவாரிகளிலிருந்து 24 மணி நேரமும் டிப்பர் லாரிகள் எம் சேண்டு, ஜல்லி, கிரானைட் பாறை கள் ஏற்றிக்கொண்டு செல்வதுதான். பேருந்து வசதி கிடையாது. 4 கி.மீ. நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில் வந்துதான் பேருந்தை பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 2.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உரிய பராமரிப்பின்றி மேற்கூறையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிறு மழை பெய்தால் கூட மழை நீர் கசிந்து உள்ளே தேங்கி நிற்பதால் குழந்தை கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஓபே பாளையம் பின்புறம் குன்றை ஒட்டி 25க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் 3 தலைமுறைகளை கடந்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. மேலும் மின்விளக்கு, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. ஊராட்சி வரைபடத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ள 27 அடி அகல பொது பாதை தனியார் ஒருவரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சிய ரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையை சீரமைத்து பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும், அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும், 27 அடி பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைவாழ் மக்கள் வீடு களுக்கு பட்டா, மின் விளக்கு, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், பொருளாளர் எம்.எம்.ராஜூ, வட்டப் பொருளாளர் சீனிவாசலு ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.