districts

சூளகிரியில் 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு

கிருஷ்ணகிரி, மார்ச் 4- கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து வரலாற்று குழுத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் சூளகிரி அருகே மாரண்டபள்ளி ஊராட்சி தொட்டனூர் கோவில் நிலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் கோவிந்தராஜ் கூறுகை யில், “ இதுவரை இந்தப் பகுதியில் கண்டறியப்படாத கல்வெட்டாகும் இது. இது 650 ஆண்டுகள் முந்தைய தாகும்”என்றார். விஜயநகர மன்னர் வீர கம்பன உடையார் காலத்தில் இருந்ததை கூறு கிறது இந்த கல்வெட்டு என்றும் அஸ்தகிரியிலுள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு கொடுக்கப் பட்ட தானத்தைப்பற்றியும் கூறுகிறது. தற்போதுள்ள சூளகிரி, 650 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்தகிரி என்று அழைக்கப்பட்டு வந்துள் ளது. சூளகிரி கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்., இந்த ஆய்வுப்பணியில் சரவணக்குமார், ராமச் சந்திரன், ஒருங்கிணைப் பாளர் தமிழ்செல்வன், கிராமத்தைச் சேர்ந்த மாரப்ப கவுடா ஆகியோர் உடனி ருந்தனர்.