கிருஷ்ணகிரி,மார்ச் 17- காவேரிப்பட்டினம் அருகே சௌட்டாளி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் 50 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டெக்ககோரி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டி னம் ஊராட்சி ஒன்றியம், சௌட்டாளி ஊராட்சிமன்றத்தில் மலையை ஒட்டி 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 50 ஏக்கர் நிலத்தை ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் பல ஆண்டுகளாக மாவட்ட அலுவலகம், காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள வருவாய் அலுவலரிடமும் பல முறை கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சௌட்டள்ளி ஊராட்சியை சேர்ந்த 600 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல துறை அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, விரை வாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து கலைந்து சென்றனர்.