காஞ்சிபுரம், ஜூலை 4 - நத்தம்பேட்டை பகுதி யில் குடியிருக்கும் மக்களின் வீட்டுமனை பட்டாக்களை காலம் தாழ்த்தாமல் உடனடி யாக அடங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டு மென ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தம்பேட்டை பகுதியில் 27வது வார்டில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிமனை பட்டா கடந்த 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
அதில் 35 குடும்பங் களுக்கு நத்தம்பேட்டை ஊராட்சியாக இருந்த போது குடிமனைப்பட்ட வங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நத்தம்பேட்டை ஊராட்சி யாக இருந்தபோது, காஞ்சி புரம் நகரத்தை தரம் உயர்த்திய பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகரத்தை தரம் உயர்ந்தி காஞ்சிபுரம் மாநகராட்சியாக தற்போது மாற்றப்பட்டு நத்தம்பேட்டை 27வது வட்ட மாக செயல்பட்டு வருகி றது. இந்நிலையிலும் கொடுக் கப்பட்ட வீட்டுமனை பட்டாக் களுக்கு இதுவரை அடங்க ளில் பதிவேற்றம் செய்யா மல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாக, காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு உடனடியாக அடங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் சிபிஎம் காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர், செயற்குழு உறுப்பினர் ஆர்.சௌந்தரி, மாநகரக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் கூறு கையில், நத்தம்பேட்டையில் குடியிருக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டாக்களை அடங்களில் பதிவு செய்ய வேண்டுமென, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிபிஎம் தொடர்ந்து அந்தப் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்காக போராடி வருகிறது. மேலும் பட்டா பெற்ற பயனாளிகள் அனைவரும் தனித்தனியாக மனுக்களை வழங்கியுள்ளனர்.
ஆனால் காஞ்சிபுரம் மாநகரமயமாக மாறிய நிலையிலும், தற் போது வரை நத்தம்பேட்டை பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டாவை அடங்களில் பதி வேற்றம் செய்யமல் காலம் தாழ்த்து வருகிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்திலும் தனித்தனியாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கள் அளித்துள்ளோம். நத்தம் புறம்போக்கில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நத்தம் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் நத்தம் புறம்போக்கு மனைகளில் குடியிருக்கும் உழைப்பாளி மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கி அடங் களில் பதிவு செய்ய வேண் டும் என கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.