districts

தடுப்பணைகள் நிரம்பின

காஞ்சிபுரம்,நவ.3-  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழையால் செய்யாற்றில் அமைந்துள்ள அனுமன் தண்டலம் தடுப்பணை, வெங்கச்சேரி ஆகிய 2 தடுப்பணைகள் நிரம்பி உள்ளன.  இதேபோல் வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு என மூன்றும் சங்கமிக்கும் பழையசீவரம் பகுதி யில் அமைந்துள்ள உள்ளகூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் வள்ளிபுரம், மற்றும் வயலூர் தடுப்பணை நிரம்பி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.