districts

img

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் காஞ்சிபுரத்தில் சாலை மறியல்

காஞ்சிபுரம், ஜூலை 4- காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் நடவடிக்கை கூட்டுக்குழு (டிட்டோ-ஜாக்) சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகி கதிரவன் தலைமையில் புதன்னறு காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பள்ளிக்கல்வித்துறை யின் 243 அரசாணையால் பதவி மாறுதலின் போது லஞ்சம் ஊழல் அதிகரிக்கும் என குற்றச்சாட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட மாவட்ட கல்வி கலந்தாய்வு மைய அரசாணை 243 ஐ திரும்பப் பெறக் கோரி தொடக்க பள்ளி ஆசிரியர் நடவடிக்கை கூட்டு குழு ( டிட்டோ ஜாக்) சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் சாலை மறியல் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்ட ஆசிரி யர்களை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பூக்கடை சத்திரம் சாலை யில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.