districts

img

நுண் கடன் நிறுவனம் தொல்லை: மாற்றுத்திறனாளி நெசவாளர் தற்கொலை

காஞ்சிபுரம், ஜூன் 29 - காஞ்சிபுரத்தில் கடன்  தொல்லையால் மன முடைந்த நெசவாளர் ஒரு வர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் வட்டத்திற் குட்பட்ட, கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 40) மாற்றுத் திறனாளி நெசவாளரான இவர் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலை யில், அவர் வியாழக்கிழமை  வீட்டில் தூக்கிட்டுத் தற் கொலை செய்து கொண் டார். இதுகுறித்து பாலு செட்டி சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனியார் நிதி நிறுவனங் கள் மூலம் கடன் பெற்று வந்துள்ளார். தற்போது நெசவுத்தொழில் பாதிப்பு  அடைந்த நிலையில் உள் ளதால், வேலையில்லாமல் வருமானம் இன்றி வறுமை யில் இருந்துள்ளார். மேலும் உடல்நிலை ஒத்துழைக் காததால் வேலைக்கு செல்ல  முடியவில்லை என கூறி யுள்ளார்.

இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் அவ ருடைய வீட்டிற்கு வந்து  தொடர்ந்து அவரையும் வீட்டில் உள்ள பெண்களை யும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள் ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அந்த காணொலியில் அவர், தனக்கு கடன் அதிக மாகி விட்டது. காலையில் தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர் தனது வீட்டிற்கு வந்து வந்து  இரவு 11 மணிக்குள் பணத்தை எப்படியாவது திரட்டிதருமாறு கேட்பதாக கூறியுள்ளார். ஆனால்  தற்போது தன்னி டம் பணம் இல்லை என்றும் அதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாக வும் அவர் கூறிவிட்டு தற் கொலை செய்துகொண் டார்.