தாம்பரம், பிப்.1 காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு நக ராட்சிகள், திருப்பெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், மதுராந்தகம் நகராட்சிகளுக்கும், மாமல்லபுரம், திருப்போரூர், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், இடைக் கழிநாடு பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவாகும் வாக்குகள் 13 மையங்களில் எண்ணப்படுகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:- தாம்பரம் மாநகராட்சி- சென்னை தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை. நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பேரூராட்சிகள்- ஜே.ஆர்.கே. பள்ளி, காட்டாங் கொளத்தூர். செங்கல்பட்டு நகராட்சி- செயின்ட்ஜோசப் பள்ளி, செங்கல்பட்டு. மதுராந்தகம் நகராட்சி- சவ்பக்மல் சவுகார் மகளிர் பள்ளி, மதுராந்தகம். அச்சிறுப்பாக்கம், கருங்குழி பேரூராட்சி- செயின்ட் ஜோசப் பள்ளி, அச்சிறுப்பாக்கம்.இடைக்காழிநாடு பேரூராட்சி-அரசு மேல்நிலைப் பள்ளி, கடப்பாக்கம். மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகள்-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கழுக் குன்றம். காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் வாஜாலாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகள்- அண்ணா பல்கலைக் கழகம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம். குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகள் - மாதா பொறியியல் கல்லூரி, குன்றத்தூர்.