districts

img

பொதுமக்கள், விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் விமான நிலையம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

காஞ்சிபுரம்,நவ.4- காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய  விமான நிலையத்தை யாருக்கும் பாப் பின்றி அமைக்கவேண்டும் என்று விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு விடுத்துள்ள  அறிக்கை வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் வட்டம் சேர்ந்த 13 கிராமத்தில் 4800 ஏக்கர் விளைநிலம் அரசு புறம்போக்கு நிலம், விவசாய பட்டா நிலம், 1005 குடியிருந்த வீடுகள் அரசு பள்ளிக்கூடங்கள் 17, குளம் குட்டைகள் 32 ஆரம்ப சுகாதார நிலையம் 5,   ஏரிகள் 22, சுமார் 52 ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து பம்பல் கால்வாய் என சுமார் 7 கிலோ மீட்டர் வரை உள்ள நிலங்கள் இந்த திட்டத்திற்காக  முடக்கப்படும் நிலை  உள்ளது. 2500 க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர  விவசாயிகள் தங்களுடைய  2,000 மேற்பட்ட  ஏக்கர்  விளைநிலங்களை இந்த திட்டத் திற்காக இழக்க உள்ளனர்.  இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப் படும், 100 நாள் வேலை செய்யும் தொழிலா ளர்கள் வேலையிழப்பர். எந்த உத்தர வாதமும் இல்லாமல் நிலம் கையகப்படுத் துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பரந்தூர் கிராம மக்கள் கடந்த  93 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் எதிர்ப்பு உள்ள நிலையில் காவல்துறையும் 13 கிராமத்திலும் காவல் பூத் அமைத்து கண்காணித்து வருகிறது. விமான நிலையத்தால் பாதிப்புக்குள்ளாகும் கிராமத்தில் நடைபெற்ற  கிராமசபை கூட்டத்தில் விமான நிலையம் வேண்டாம் மென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரந்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள  கிராமங்களில் அரசாங்கத்திற்கு சொந்த மாக 2500 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளதாக வும் அந்த நிலத்தை விமான நிலையம் அமைக்க எடுக்கலாம் என்றும் அதிகாரிகளே கூறிவருகின்றனர். எனவே தமிழக அரசு  ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங் களை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.