காஞ்சிபுரம், ஏப். 2 – காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புது நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாய பாரத், ஆரோக்கிய அருண், இருதய ராஜ். இவர்களில் சகாய பாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் காவலராக பணியாற்றி வரு கிறார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலராக உள்ளார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொது மக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்ததாக கூறுப்படு கிறது. மேலும் கட்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் சகோதரர்களான சகாயபாரத், ஆரோக்கிய அருண் ஆகியோர் குடும்பத்துடன் சேர்ந்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.