காஞ்சிபுரம், ஜூலை 8 - காஞ்சிபுரத்தில் காய்கறி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி மதுபாட்டில்களை அம லாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாகரல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சித்தாலப்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கத் துறை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமை யில் வியாழனன்று (ஜூலை7) நள்ளிரவில் வாகன சோதனை நடை பெற்றது. அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பொலிரோ சிட்டி பிக் அப் வாகனத்தை அதிகாரிகள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் காய்கறிகள் பெட்டிகள் அடியில் மதுபாட்டில்களை மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.