காஞ்சிபுரம், மே 10- கோரா பட்டு நூல் விலை உயர்வை கண்டித்து நெசவாளர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காஞ்சிபுரம், கும்பகோணம், சிருமுறுகை, திருப்பூர் மையங்களில் செவ்வாயன்று (மே 10) ஒரு நாள் கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாரம்பரியமான தொழி லான பட்டு சேலை உற்பத் தியில் மூலப்பொருளான கோரா பட்டு நூல் விலை 110 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதனால் பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் பட்டுச் ்சேலை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். பட்டுப்புடவை கடைகள் அதிகமுள்ள காந்தி சாலையில் உள்ள 300க்கும் மேற்பட்ட பட்டுச்சேலை விற்பனை கடைகள், கோரா விற்பனை கடைகள், பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிய அரசுக்கு தங்க ளது கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தபோராட்டம் குறித்து பட்டுச்சேலை உற்பத்தி யாளர்களிடம் கேட்டதற்கு, பட்டுச்சேலை உற்பத்தி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கி விட்டு அதன் விற்பனை மீது வரி விதித்தால் தற்போதுள்ள நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம். கோரப் பட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து உள்நாட்டிலே உற்பத்திக்கு முக்கியத்து வம் என்ற பெயரில் ஒன்றிய அரசின் தவறான நடவடிக் கையால் கோரா பட்டு நூல் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் சிறு, குறு நடுத்தர நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டு நெசவுக்கு பயன்ப டும் நூல் விலையை ஒன்றிய அரசின் நிதித்துறை, வர்த்த கம், ஜவளித்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் நிர்ணயிப்பதால் காலதா மதம் ஆவதாகவும், உற்பத்திக்கு தேவையான கோரா பட்டு நூல் விலையை குறைத்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கைகள்
பட்டு நூல் விலையைக் உடனடியாக குறைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப வரி நீக்கம் செய்ய வேண்டும். நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சரிகைக்கு மானியம் வழங்க வேண்டும் கோரா பட்டின் விலையை ஒரே மையத்தில் தீர்மானிக் கும் ஒருமுகப்படுத்தப்பட்ட விலை நிர்ணய முறையை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும். பட்டு துணி உற்பத்திக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில் தேவை யான அளவு மல்பரி பட்டுப் புழு வளர்ப்பு, இறக்குமதி உள்ளிட்ட அனைத்து அம்சங் களையும் கண்காணிக்க குழுவை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டு பட்டு உற்பத்தியை அதிகப்படுத்த எடுக்கப்படும் முயற்சியை தொடரவேண்டும், உள் நாட்டு பட்டு நெசவை பாது காக்கும் வகையிலும் இந்திய பட்டு விவசாயம் பாதிக்காத வகையிலும் தாரளமாக பட்டு நூல் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கவேண்டும். செயற்கையாக விலை உயராமல் இருக்க பட்டு பதுக்கல் செய்யும் முகவர் கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பட்டு நெசவாளர்கள் வலியுறுத்தி யுள்ளனர். காஞ்சிபுரம், காந்தி ரோடு தேரடியில் நடைபெற்ற கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழ்நாடு கைத்தறி நெச வாளர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் இ. முத்துக்குமார் தலைமை தாங்கினார். இதில் பட்டு சரிகை சேலை உற்பத்தி யாளர்கள், வணிகர் சங்கத் தலைவர்கள், பருத்தி பட்டு நெசவுத் தொழிலாளர்கள், சிஐடியு சங்க நிர்வாகிகள், அனைத்து கூட்டுறவு சங்கத் தலைவர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டு பேசினர்.