காஞ்சிபுரம்,டிச.18- தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23-ந்தேதி புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா 100 அரங்கு களுடன் அடுத்த மாதம்(ஜனவரி)-2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்து இருக்கும். இதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. இந்த நிலையில் புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ஆட்சியர் ஆர்த்தி தலைமை யில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சுதாகர், திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் புத்தகத் திருவிழாவிற்கான பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். மேலும் இது குறித்து குறும்படம் ஒன்றும் வெளியிட ப்பட்டது. குறும்படத்தை பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு காண்பிக்கவும், சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டி.வி. சேனல்கள் மூலம் ஒளி பரப்பவும் உத்தரவிட்டார்.