கள்ளக்குறிச்சி, பிப். 10- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதி தாக நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா அரசு தொழிற்பயிற்சி நிலை யம் அருகே மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், “மூன்றரை கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நகராட்சி கட்டிடம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மையப்பகுதியாகும்”என்றார். பின்னர், அரசு மருத்துவ மனையில் சட்டமன்ற உறுப்பினர் அ.ஜ.மணிகண்டன் நிதியில் இருந்து அமைக்கப்பட்ட புதிய ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜி, மருத்துவர் நளினி போஸ், தலைமை மருத்துவர் கே.திரு நாவுக்கரசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.