districts

தியாக துருகம்: கபடி பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 19- கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் துவக்க நிலை கபடி பயிற்சி மையம் அமைக்கப் பட்டுள்ளது. இதில் 100 கபடி வீரர்க ளுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதிற்குட்பட்ட கபடி வீரர்கள் ஆண், பெண் தனித் தனியாக ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப் பதாரர் 5 ஆண்டுகள் அனுபவ மும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிப்பவராகவும், சர்வதேச அல்லது தேசிய அளவி லான போட்டியில் பதக்கமும், அகில இந்திய பல்கலைக் கழக போட்டிகளில் பதக்கம் அல்லது சர்வதேச போட்டி மற்றும் சீனியர் தேசிய போட்டியில் கலந்து கொண்டவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப் பட்ட பயிற்சியாளருக்கு 11 மாதத்திற்கு ஒருமுறை கட்டண மாக ரூபாய் 25,000 வழங்கப் படும். இது நிரந்தர பணி அல்ல, தற்காலிகமானது. தகுதியான நபர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.