districts

டாஸ்மாக் கடைகளில் மாமூல் கேட்கும் கும்பல்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

விழுப்புரம், மே 4- விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் மேற்பார்வை யாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தினசரி பல ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டும் அராஜக போக்கைக் கண்டித்து விழுப்பு ரம் புதிய பேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மேற்பார்வையாளர் எம்.ரவிக்குமார், விற்பனையாளர் பி.லோகநாதன் மீதான சட்டவிரோத தற்காலிகப் பணிநீக்க நட வடிக்கையை ரத்து செய்ய வேண்டும், மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மூடப்பட்ட சின்னசேலம் கடை எண் 11725ஐ மீண்டும் திறக்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தில் அத்துமீறி தலை யிட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கரூர் ரமேஷ் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து நடடிக்கை எடுக்க வேண்டும். கரூர் ரமேஷ் கும்பலின் உத்தரவுக்கு கீழ்படிந்து தினசரி 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும் கடையை மூடி டாஸ்மாக் நிறுவனத்திற்கு பெருத்த நட்டம் ஏற்படுத்தும் மாவட்ட மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்து குமரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் பி.குமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆ.சவுரிராஜன், மாவட்ட துணைத்தலைவர் ஏ.வி.சரவணன், டிஜிடிஇயு மாநில துணைப் பொதுச்செயலாளர் சி.அருணகிரி, அரசு பணியாளர் ஒன்றிய மாநிலத் தலைவர் கே.ரமேஷ், nஜ.ராஜா (டிஎன்டிஎஸ்ஐஇடியு), டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.