கள்ளக்குறிச்சி,ஜூலை 16- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டாரத்தில் 8 ஊராட்சிகளில் உள்ள 15 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் 937 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலை வர் ஸ்ரீதர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாண வர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை யில் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடை பெற்றது. சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தேவநாதன், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலு வலர் செல்வி, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)சரவணபவா. கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலு வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பி னர்கள், ஊராட்சி அளவி லான சுய உதவிக்குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.