கள்ளக்குறிச்சி, அக். 15- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் கெடிலம் பகுதியில் வேளாண் துறை அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டது. இந்த மானிய பொருட்கள் வெள்ளிக்கிழமை கெடிலம் பகுதிகளில் உள்ள வேளாண் துறை அலுவல கத்திற்கு வந்தது. இதையடுத்து விவசாயிகள் தங்களது விவசாய நில சிட்டா அடங்கள் கொடுத்து அரசு மானியத்தை வாங்கிச் சென்ற னர். இதனால் வேளாண் துறை அலுவலகத்தில் விவசாயி களின் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு பணியாற்றி வந்த உளுந்தூர்பேட்டை டெப்போ மேனேஜர் செந்தில்நாதன் விவ சாயிகளிடமிருந்து விவசாய சிட்டா நகலை பெற்றுக் கொண்டு விவசாயிகளிடம் ரூ. 900 வீதம் மானிய பொருட்களை விற்றதற்கு உண்டான ரசீது ஏதும் தராமல் விற்றுள்ளார். இதுகுறித்து சில விவ சாயிகள் கேட்டதற்கு செந்தில் நாதன் முறையாக பதில் அளிக்க வில்லை. இதனால் விவசாயிகள் கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 6 மணி நேரம் நடைபெற்றது. ஆய்வின் முடிவில் வேளாண் துறை அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 4,20,000 பணம் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செந்தில்நாத னிடம் அரசு வழங்கிய மானியம் 40 ரூபாயை விட அதிகமாக விவசாயிகளிடம் பணம் வசூலித்து ரசீது இல்லாமல் மானிய பொருட்களை விற்பனை செய்ததற்கான காரணத்தை காவல் துறையினர் கேட்டனர். இதற்கு செந்தில்நாதன் செய்வ தறியாது திகைத்து நின்றார். மேலும் காவல் துறையினர் இதுகுறித்து செந்தில்நாதன் மற்றும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.