districts

img

உதவித்தொகையை உயர்த்துக: மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, ஜூலை 18- மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின்  கள்ளக்குறிச்சி மாவட்ட 3ஆவது மாநாடு தோழர் டி.லட்சுமணன் நினை வரங்கில் மாவட்டத் தலைவர் பி.வேலு தலைமையில் நடை பெற்றது. என்.கண்ணன் வரவேற்றார். ஜி.கார்த்திக் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலப் பொருளாளர் கே.எஸ்.பார்த்தசாரதி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எஸ்.சாந்தி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றி னார். டி.மாயகிருஷ்ணன் நன்றி கூறி னார். மாவட்ட நிர்வாகிகள் எம்.ஹூ மாயூன்கான், கே.அஞ்சலை, எம்.எஸ். அண்ணாமலை ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். 100 நாள் வேலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும், சட்டப்படி கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 21 பேர்கொண்ட மாவட்டக் குழு விற்கு பி.வேலு தலைவராகவும், எம். ஆறுமுகம் செயலாளராகவும், கே.அலமேலு பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக மாநாட்டையொட்டி கள்ளக்குறிச்சி அம்பேத்கர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநிலப் பொருளாளர் கே.எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் பேசினர்.