districts

img

சிபிஎம் எம்எல்ஏ தலைமையில் ரயில் நிலையம் முற்றுகை உளுந்தூர்பேட்டையில் விரைவு ரயில்கள் நிறுத்த கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, அக் 28 - கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலை யத்தில் அனைத்து விரைவு ரயில்க ளும் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக். 28 வெள்ளியன்று முற்றுகை போராட்டம் நடை பெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய இரண்டு பெரிய ரயில் நிலை யங்கள் இருந்தும் அவ்வழியாக செல்லக்கூடிய விரைவு ரயில்கள் எதுவும் இங்கே நின்று செல்வ தில்லை. விழுப்புரத்தை அடுத்து விருத்தாச்சலத்தில் ரயில்கள் நிற்பதால் இப்பகுதியில் பல்லா யிரக்கணக்கான மக்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்வதற்கு மற்றும் வியாபார நிமித்தமாக செல்லக்கூடிய வியாபாரிகளும் விழுப்புரம் அல்லது விருத்தாசலம் சென்று பயணிக்கும் நிலை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. கடந்த காலங்களில் மகாத்மா காந்தி இந்த ரயில் நிலையத்தில் இறங்கி பொதுமக்களிடையே விடுதலைப் போராட்டம் குறித்து உரை யாற்றிய பாரம்பரியமிக்க இந்த இடத்தை கடந்து இரவில் 30க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் பகலில் இருபதுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் சென்று வந்தாலும் ஒரு ரயில் கூட இங்கு நின்று செல்லாததால் இப்பகுதி மக்களுக்கு ரயில் வசதி என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டி.கே.ரங்க ராஜன், இந்த ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்து இங்கு விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே துறை அதி காரிகளுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், உளுந்தூர்பேட்டை நகர் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ரயில்கள் நிற்க வேண்டும் என மனுக்கள் அனுப்பி யும் இதுவரை ரயில்வே துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. அதன்தொடர்ச்சியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் வெள்ளியன்று (அக்.28) முற்றுகை போராட்டம் நடை பெற்றது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு திரு நாவலூர் கிழக்கு ஒன்றியச் செய லாளர் ஜெ.b ஜயக்குமார் தலைமை தாங்கினார். திருநாவலூர் மேற்கு, உளுந்தூர்பேட்டை நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றியச் செயலாளர்கள் டி.எஸ்.மோகன், பி.சேகர், ஆர்.சீனிவாசன், வி.ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ஏழுமலை, பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவராகன், எம். செந்தில், வி.சாமி நாதன், இ.அலமேலு, வி.ஏழுமலை, எம்.கே.பழனி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், கே.அய்யனார், ஏ.தேவி, மு.சிவக்குமார், வி.சின்னராசு, கே. வீரமணி ஆகியோர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தள்ளு-முள்ளு
காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலைய அதிகாரிகள், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பி னர் சின்னதுரை மற்றும் தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, உயர் அதி காரிகளிடம் கலந்து பேசி உரிய நட வடிக்கை எடுக்க அவகாசம் கேட்ட னர். இதனையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.