districts

img

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு

கள்ளக்குறிச்சி,மார்ச் 12- கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் எ.வ.வேலு ஆகியோர் திறந்து வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறு வங்கூர் கிராமத்தில் சமத்துவபுரம் அருகே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய துணை சுகாதார நிலை யங்களை தொடங்கி வைத்தும், நான்கு மாவட்டங்களில் புதிய மருந்து கிடங்கு கட்டுவதற்கான அடிக்கலையும் நாட்டினர். இந்த விழாவில் உரை யாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணி யன்,“புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு மருத்துவ மனையில் 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. விபத்துகளில் சிக்கு பவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக 23 அதிநவீன பிரிவுகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளது”என்றார். மருத்துவமனை திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி னார். கல்லூரி முதல்வர் உஷா வரவேற்றார். மக்களவை உறுப்பினர் பொன். கவுதமசிகாமணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.