districts

img

கள்ளக்குறிச்சி காவல் துறையினரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, நவ. 21- புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையை கண்டித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் அலு வலகம் முன்பு அன்மை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோ.மணிமாறன் மகன் லெனின் என்பவர் சின்ன சேலம் வட்டம் ஈரியூர் கிராமத் தைச் சேர்ந்த நல்லமுத்து தங்கமணியின் மகள் தன லட்சுமி என்பவரை 13.3.2022 அன்று திருமணம் செய்து கொண்டார். பிறகு லெனின்,  ஈரியூ ரில் மாமனார் நல்லமுத்து வீட்டில் மனைவி தனலட்சு மியுடன் 21 நாட்கள் தங்கி யிருந்தார். பிறகு தனலட்சுமி குடும்பத்தினரால் லெனின் தாக்கப்பட்டு 4.5.2022 அன்று சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து லெனின் பெற்றோ ருக்கு தெரிவிக்கவில்லை. பிறகு லெனின் பெற்றோர்க ளுக்கு தகவல் தெரிந்து 5.5.2022 அன்று அவர்களது மகனை மருத்துவமனையில் பார்த்த போது எந்த அசை வும் இல்லாமல் சுய நினை வின்றி இருந்துள்ளார். இதுகுறித்து கீழ்குப்பம் காவல் நிலையத்தில் 5.5.2022 அன்று இரவு சுமார் இரவு 8 மணியளவில் மேற்கண்ட நபர்களின் மீது புகார் அளிக்கப்பட்டது. 7.5.2022 அன்று லெனின் சுய நினைவு இல்லாததை அறிந்த தனலட்சுமி, அவரின்  இரண்டு கை கட்டை விரலில் ரேகை புரட்டியுள்ளார். அன்று மாலை சுமார் 4.45 மணியளவில் லெனின் இறந்துவிடுகிறார். 8.5.2022 அன்று என் மகன் லெனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், ரேகை புரட்டியது தொடர்பாகவும் தனலட்சுமி மற்றும் அவர்  குடும்பத்தினர் மீது கீழ் குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று லெனின் தந்தை மணிமாறன் கூறினார். காவல்துறையின் அலட் சிப்போக்கை கண்டித்து  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு  சங்கராபுரம் ஒன்றியச்  செயலாளர் எஸ்.சிவாஜி தலைமை தாங்கினார். இதில் மாநிலக் குழு உறுப் பினர் ஆர்.பத்ரி, மாவட்டச்  செயலாளர் டி.எம்.ஜெய் சங்கர், செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஆனந்தன், வி.ராஜா, வே.ஏழுமலை, ஜி.அருள்தாஸ், டி.மாரி முத்து உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.