கள்ளக்குறிச்சி,ஜூன் 1- கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பேசுகையில், “பழங்குடி யின வகுப்பைச் சார்ந்த பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை மேல்நிலை கல்வியோடு நிறுத்தி விடாமல், உயர் கல்வி கற்பதற்கு வழிகாட்ட வேண்டும்” என்றார். பழங்குடியின இயக்கு னர் அண்ணாதுரை பேசுகை யில், சமூகத்தில் மரி யாதைக்கும், தன்னம்பிக் கும், பொருளாதார முன் னேற்றத்திற்கும் கல்வியே மிகப்பெரிய ஆயுதமாகும். எனவே மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தங்கள் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் பழங்குடியினர் நலன் திட்ட அலுவலர் இளங் கோவன், பழங்குடியினர் நலத் துறை உதவி இயக்கு னர் வைரமணி. உதவி செயற் பொறியாளர் பிரகாசம். கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் நடராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.