districts

img

தன்னிறைவு கிராமமாக மாற்றுவேன்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் உறுதி

கள்ளக்குறிச்சி,ஜூலை 21- அனைத்து கிராமங் களையும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்று வேன் என புதிய மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளரிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட் டத்தின் 3ஆவது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். கடந்த வாரத்தில் நடை பெற்ற பள்ளி மாணவியின் இறப்பு குறித்து நியாய மான விசாரணை மேற் கொள்ளப்பட்டு சட்டரீதி யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகள் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவி களையும் முழு வீச்சில் வழங்க நடவடிக்கை எடுப்பேன். தற்போது உள்ள சூழ்நிலையில் தவ றான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அமைதியான நகரமாக திகழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். கள்ளக் குறிச்சி மாவட்டம் வேளாண் மாவட்டமாக உள்ளதால் ஒன்றிய, மாநில அரசின் திட்டங்கள் ஒவ்வொரு விவ சாயிகளுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்க ளிலும் சாலைகள், பள்ளி கள், குடிநீர் வசதி, தெரு விக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றுவேன். இவ்வாறு அவர் கூறி னார். அதைத் தொடர்ந்து சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள், அலுவல கங்கள் மற்றும் மாணவி 3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த இடம் ஆகியவற்றை பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.