கள்ளக்குறிச்சி,ஏப். 25- கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்து கொண்டர். அப்போது பேசிய அவர், வறுமை ஒழிப்பு ஆரோக்கியமான வாழ்வு, மனித நேயம், குடி நீர் வசதி, சிறந்த நிர்வாகம், அடிப்படை வசதி கள், மற்றும் பாலின சமத்து வம் ஆகிய நீடித்த வளர்ச்சிக்கான 9 இலக்கு களை அடைய ஊராட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் கிராமப்புறங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் செல்வதால், விபத்துக்களை தவிர்த்திடும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் சாலைகளை கடப்பதிலும், கால்நடைகளை அழைத்துச் செல்வதிலும் கவனமாக செயல்பட வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டா யம் சீட் பெல்ட்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசமும் அணிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதில், உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) ரெ.ரத்தின மாலா, இணை இயக்குநர் வேளாண்மை எஸ்.வேல்விழி, வாவட்ட ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளார் முனிஸ்வரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராதிகா, ஊராட்சி மன்றத் தலைவர் சி.ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.