districts

img

புது உச்சிமேடு ஊராட்சிமன்றத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஏப். 7- கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சியை தனி வரு வாய் கிராமமாக பிரிக்கக் கோரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கி னார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், புது உச்சிமேடு ஊராட்சி மன்றத்தில் பழைய உச்சிமேடு, ராமநாதபுரம், பட்டி, புது உச்சிமேடு ஆகிய 4 கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி கொங்கரா யபாளையம் ஊராட்சியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது. ஆனால் இதுநாள்வரை புது உச்சிமேடு தனி வருவாய் கிராமமாக பிரிக்கப்படாமல் உள்ளது.  இதனால் புது உச்சிமேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தொலை விலுள்ள கொங்கராயபாளையம் ஊராட்சிக்கு சென்று பட்டா, சிட்டா, அடங்கல்கள், சான்றிதழ் கள் மற்றும் பிற அரசு திட்ட அனுமதி மற்றும் பதிவுகளை பெற வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் மற்றும் முதலமைச்சர் தனி பிரி விலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புது உச்சிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக பிரித்துக்கொடுக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக பொது மக்கள் சிரமத்தை குறைக்கும் வகை யில் வாரத்தில் 3 நாட்கள் புது உச்சி மேடு ஊராட்சியிலும், 3 நாட்கள் கொங்கராய பாளையம் ஊராட்சியிலும் கிராம நிர்வாக அலு வலகத்தை செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், வட்டச் செயலாளர் அருள்தாஸ், தேமுதிக ஒன்றியச் செயலாளர் இளையராஜா, பாமக ஒன்றியச் செயலாளர் துரை, விசிக ஒன்றியச் செயலாளர் கலையமுதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனலட்சுமி, சுமதி பாபு ஆகியோர் பேசினர்.