districts

img

கள்ளச்சாராய கொடுமையைக் கண்டித்து வாலிபர், மாதர், சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 21 - தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கள்ளச் சாராய உயிரிழப்புகளை கண்டித்தும், உரிய நிவாரணத்தையும், உரிய நட வடிக்கையையும் எடுக்கக் கோரி இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  வெள்ளிக்கிழமை டெல்டா மாவட்டங்க ளின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருச்சிராப்பள்ளி
வாலிபர் சங்கத்தின் சார்பில் திருச்சி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, மாநகர் மாவட்டச் செயலாளர் சேதுபதி தலைமை  வகித்தார். புறநகர் மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் பாலமுருகன் மற்றும் மாநகர் - புறநகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

திருவாரூர்

வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக பழைய பேருந்து  நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டதிற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரளம்

நன்னிலம் ஒன்றியம் பேரளம் பேருந்து  நிலையம் அருகே, சிபிஎம் மாவட்டக்  குழு சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாநி லக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன்  கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத் தில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பி.கோமதி, பொருளாளர் ஆர்.சுமதி,  சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே. எம்.லிங்கம், நகரச் செயலாளர் சீனி.ரா ஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்

வாலிபர் சங்கத்தின் சார்பில் நாகப்பட் டினம் மாவட்டம் பாப்பாகோவில் கடைத்  தெருவில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் டி.அருள் தாஸ், மாவட்டத் தலைவர் பி. எம்.நன்மாறன், பொருளாளர் என்.எம்.பாலு உள்ளிட்டோர் பேசினர்.

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அப்பாவி மக்களை பலி வாங்கிய கள்ளச்  சாராயக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச் செல்வி தலைமை வகித்தார். மாவட்டச்  செயலளர் பி.சுசிலா, விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் டி. சலோமி, மாதர் சங்க மாவட்டப் பொருளா ளர் ஜெ.வைகைராணி மற்றும் நிர்வாகி கள் மதியரசி, ஷோபனா, மகாலெட்சுமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயக் கும்பலை கைது செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ மனை, கல்லூரி வளாகங்களுக்கு அரு கில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடி யாக மூட வேண்டும். அரசு மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படி யாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.