கள்ளக்குறிச்சி, டிச. 21 திருநாவலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் திருடுபோன 1,790 சவரன் நகையை ஒப்படைக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதன் விளைவாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலு வலகத்தில் புதனன்று (டிச.21) சமாதானக் கூட்டம் நடந்தது. இதில் வட்டாட்சியர், காவல்துறை அதி காரிகள், கூட்டுறவு இணை பதிவாளர், துறை அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி. ஏழுமலை, திருநாவலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் து.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீதிமன்றத்திலுள்ள வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிவுக்கு கொண்டு வர அரசு தரப்பு வழக்கறிஞர் மூலம் நட வடிக்கை மேற்கொள்வது, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக மாநில பதி வாளருக்கு பரிந்துரைப்பது. கைப்பற்றப் பட்ட சொத்துக்கள் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க சொத்துக்களை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. உரிய ஆவணங்களுடன் விண்ணப் பிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நிதியி லிருந்து நிதி பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.