districts

img

முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்க! டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 11 - டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறை பணியிட மாறுதல் கொள்கையை உரு வாக்கி அமலாக்கிட வேண்டும். முறை கேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்திட வேண்டும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஏற்பாடு செலவுத் தொகையை முழுமையாக வழங்கிட  வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மேல்முறையீடு செய்யாமலும், சட்டத்திருத்தம் செய்யாமலும் மதுக்கூடங் களை மூட வேண்டும். டாஸ்மாக் கடை நிர்வா கத்தில் தலையிடும் மதுக்கூட உரிமையா ளர்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் ஆர்எம்எஸ்  அலுவலகம் முன்பு நடைபெற்றது.  டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட தலைவர் ஜீ.ஜீவா னந்தம், சிஐடியு மாவட்ட செயலாளர் சி. முருகேசன்  ஆகியோர் கண்டன உரையாற்றி னர். டாஸ்மாக் சங்க மாவட்டக் குழு  உறுப்பினர்கள் சுரேஷ்குமார், பிச்சைமுத்து, சிஐடியு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.