கரூர், செப்.30 - தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு காகித ஆலை கரூர் மாவட்டம் புகளூரில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், திரு வையாறை சேர்ந்த அருள்சுதன் (32) என்பவர் கிரெயன் ஆபரேட்டராக பணி புரிந்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், சஹானா என்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளது. அருள்சுதன் வியாழக்கிழமை இரவு ஆலையில் வேலை செய்துள்ளார். அப்போது அவருக்கு இரவு 11 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக கூறி, ஆலையில் உள்ள முதலு தவி மையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், வாய்வு தொல்லையாக இருக்கும் எனக் கூறி சாதாரண மாத்திரைகளை கொடுத்து அனுப்பி யுள்ளார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகும் தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி இருந்திருக்கிறது. அதிகாலை 4 மணியளவில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே அருள்சுதன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் காகித அலை முதலு தவி மையத்திற்கு அவரை கொண்டு சென்று, மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். பின்னர் கரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அருள்சுதனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடற்கூராய்வுக்காக கரூர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவ மனையில் அருள்சுதன் உடல் வைக்கப்பட்டது.
உறவினர்கள் - தொழிலாளர்கள் போராட்டம்
இந்நிலையில், முதலுதவி மைய மருத்து வர் முறையாக பரிசோதனை செய்திருந் தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். அருள்சுதனின் இறப்பிற்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என உறவினர்கள், தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழந்த அருள்சுதன் மனைவிக்கு காகித ஆலையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத் திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வேலை வழங்கினால்தான் உயிரிழந்தவரின் உடலை கூராய்வு செய்ய அனுமதிப்போம் என உறவினர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பிண வறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.