districts

சிபிஎம் போராட்டம் வெற்றி தெலுங்கப்பட்டி மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது

கரூர், டிச.10 - சுடுகாட்டிற்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம், பொருந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட தெலுங்கப்பட்டியில் ஆதிதிரா விடர் மக்கள் சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இம்மக்கள் பயன்படுத் தும் சுடுகாட்டிற்கு, எரிமேடை, சாலை, குடிதண்ணீர் வசதி மற்றும்  சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தெலுங்கப்பட்டி கிளையின் சார்பில், தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும், கரூர் மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை கோரிக்கை மனுக்கள் வழங்கி, தொடர் போராட்டங்களை நடத்தப்பட்டன.  ஆனாலும், அரசு அலுவ லர்கள் கோரிக்கைகளை கிடப்பில்  போட்டனர். கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, 15.6.2022 அன்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்று கைப் போராட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தெலுங்கப்பட்டி கிளை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்க ருக்கு கோரிக்கை மனுவும் அனுப் பப்பட்டது.  மாவட்ட ஆட்சியர் கோரிக் கையை ஏற்றுக்கொண்டு சுடுகாட்டு  இடத்தை நேரடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதனை யடுத்து ஆதிதிராவிடர் நல அலுவ லர் மற்றும் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் ஆகியோர் நேரடி யாக சுடுகாட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், சுடுகாட் டிற்கு எரிமேடை, சாலை, குடிநீர்  வசதி, சுற்றுச்சுவர் அமைத்து கொடுப்பதற்கு, ஒரு வாரத்திற்குள் பணிகளை துவக்க வேண்டுமென தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். ஆய்வின் போது பொருந்த லூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகை மலை ஒன்றிய குழு உறுப்பினர் கள் ஏ.சுப்ரமணி, எ.முனியப்பன், கிளை உறுப்பினர் கே.மேக வர்ணன், ஊராட்சி செயலர் இளங் கோவன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
5 மாதமாக பணியை  தொடங்கவில்லை
மாவட்ட நிர்வாகம் உடனடியாக  பணிகளை துவங்க உத்தரவிட்டும், தோகைமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பணிகளை துவங்காமல் 5 மாதமாக கிடப்பில் போட்டு, அலட்சியமாக செயல்பட்டது. இத னால் தெலுங்கப்பட்டி மக்கள்  மழை காலங்களில் சடலங்களை எரிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாததால், டயரை  எரித்து வெளிச்சத்தை ஏற்படுத்தி,  இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டனர். தண்ணீர் தேவைக்காக பக்கத் தில் உள்ள கிணறுகளுக்கு சென் றால் உரிமையாளர்கள் முகம் சுளிக்கும் சூழல் ஏற்படுகிறது. சாலை இல்லாததால் மேடு பள்ளங் களில் கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. இதனால் கடுமை யான மன உளைச்சலுக்கு பொது மக்கள் ஆளாகியுள்ளனர். இவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் தோகைமலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சிபிஎம் சார்பில் 1.10.2022 அன்று ஒன்றிய அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.  இதனையடுத்து 19.10.22 அன்று  ரூ.7.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு  செய்து, டெண்டர் விடப்பட்டு, தற்போது பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கப்பட்டி கிளை சார்பில் தொடர் போராட்டம் நடத் தியதின் விளைவாக பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனையறிந்த தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம மக்களும், தெலுங்கப்பட்டி கிரா மத்தை சேர்ந்த பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சொந்த நிலத்தை வழங்கினர்
இந்த சுடுகாட்டிற்கு செல்லும்  பாதையில் 10 மீட்டர் தொலை விற்கு, தனியார் பட்டா நிலத்தில்  பாதை வருகிறது. மாவட்ட ஆட்சி யரின் உடனடி உத்தரவின் பேரில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், நில உரிமையாளரான ஆர்.எஸ்.சங்கிலிமுத்து குடும்பத்தி னரை நேரில் அழைத்து சுமூக பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் அடிப்படையில், தனியார் நிலத்தில்  10 அடி தொலைவிற்கு சாலை அமைத்து கொடுக்க தானாக முன்வந்து அரசுக்கு நிலத்தை வழங்கினர். மேலும் இந்த 10 அடி சாலைக்கு தங்களது சொந்த செல விலேயே, பொக்லைன் இயந்தி ரத்தை மூலம் பாதை அமைத்து கொடுத்தனர்.
வரவேற்பும், நன்றியும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தெலுங்கப்பட்டி கிளையின் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரின் விரை வான நடவடிக்கையை கட்சி வர வேற்றுள்ளது. மேலும் தனது சொந்த நிலத்தை இலவசமாக வழங்கிய ஆர்.எஸ். சங்கிலிமுத்து  குடும்பத்தினர்கள் ஆர்.எஸ்.மனோ கரன், ஆர்.எஸ். தமிழ்செல்வன், பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலை வர் சத்யாராமச்சந்திரன் ஆகியோ ருக்கும் கட்சியின் சார்பில் நன்றியை  தெரிவித்துள்ளனர்.