கரூர், மே 28 - தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளு நர்கள் சங்கத்தின் 2 ஆவது மாநில பிரதி நிதித்துவ பேரவை கரூர் நாரதகான சபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரவைக்கு சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை வகித்து சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி னார். வரவேற்பு குழு தலைவர் கெ.சக்திவேல் வரவேற்றார். அரசு அனைத்து மருந்தாளுநர் கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.சண்முகம் வேலை அறிக்கையை முன் வைத்து பேசினார். மாநில பொருளாளர் அ. விஷ்வேஸ்வரன் வரவு-செலவு அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட தலைவர் ஆர்.சுரேஷ்குமார் நன்றி கூறினார். மாநிலத் தலைவராக வி.விஜயகுமரன், மாநில பொதுச் செயலாளராக உ.சண்முகம், மாநில பொருளாளராக ச.ஹோமலதா, மாநில அமைப்பு செயலாளராக அ.விஸ்வேஸ்வரன் உள்ளிட்ட 13 மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை மருந்தாளுநர், மருந்துக் கிடங்கு அலுவலர்களின் ஊதிய முரண்பாடுகளை கைவிட வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் முறையான பாதுகாப்பான மருந்துக் கிடங்கை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.