கரூர், ஏப்.2 - சாரண-சாரணியர் களுக்கான திருப்பூர் மண்டல அளவிலான திறனறிதல் போட்டியில் பரணி பார்க் சாரணர்கள் முதலிடம் பெற்றனர். சாரணியர்கள் இரண்டாமிடம் பெற்றனர். அண்மையில் நடை பெற்ற திருப்பூர் மண்டல அள விலான சாரண, சாரணியர் களுக்கான திறனறிதல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சாரண, சாரணியர்கள் பங் கேற்றனர். சாரணர் முகாம் கலை, முதலுதவி பயிற்சி, ஆக்கல் கலை, திசை அறியும் பயிற்சி, மதிப்பீட்டுத் திறன், சீருடை அணி திறன், கலைத் திறன்கள், வனக்கலை மற்றும் சமைக்கும் திறன் போன்ற பல்வேறு திறன்களின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சாரணர் களுக்கான பிரிவில் பரணி பார்க் மாவட்டத்தைச் சேர்ந்த சாரணர்கள் விகாஷ் நேத்ரன், தனிஷ், ருத்தேஷ், தர்ஷன், பஷித் முகமது, சூர்யா, கணேஷ், ராகமித்திரன் மற்றும் சாரண ஆசிரியர் ஆனந்தகேத்ரின் ஆகி யோர் முதலிடமும், சாரணியர் களுக்கான பிரிவில் மிதா, பிரியங்கா, விதுலாஸ்ரீ, பவித்ரா, சகானா, சஷ்டிகா, அனகலட்சுமி, பிரனிதாஸ்ரீ மற்றும் சாரணிய ஆசிரியர் சித்ரலேகா ஆகியோர் இரண் டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற சாரண, சாரணியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழா விற்கு பரணி பார்க் சாரண இயக்கத்தின் முதன்மை ஆணையரும், பரணி பார்க் பள்ளி தாளாளருமான மோகனரங்கன் தலைமை வகித்தார். பரணி பார்க் சார ணிய ஆணையரும், பள்ளி யின் செயலாளருமான பத்மா வதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் சாரண ஆணையரும் பள்ளியின் முதன்மை முதல்வருமான முனைவர் ராமசுப்பிரமணி யன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.