கரூர், டிச.18 - நீதிமன்றம் உத்தரவுப்படி எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கிட வேண்டும். போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்தும், ஏழு வரு டத்திற்கு மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை பணி நிரந்த ரம் செய்திட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலி யர்களின் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிதா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைச் தலைவர்கள் மொ.ஞானத்தம்பி, மு. செல்வராணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்க மாவட்ட தலைவர் மு.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், மாவட்ட பொருளாளர் பொன் ஜெயராம், மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.அன்பழகன், மு.அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.