districts

img

செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று (மார்ச் 31) பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கரூர் மண்டல மேலாளர் முருகேசன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.