districts

தெரு நாய்களை பிடித்த பேரூராட்சி நிர்வாகம்: சிபிஎம் கவுன்சிலருக்கு மக்கள் பாராட்டு

கரூர், ஜன.7- கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண் டம், சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் கடித்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரி ழந்துள்ளன. மேலும் குழந்தைகள், பொது மக்கள் பெரும் அச்சத்துடனே தெருவில் சென்று வருகின்றனர். இரு சக்கர வாகனத் தில் செல்வோரையும் நாய்கள் கடிக்க வருவ தால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து கள் ஏற்படுகின்றன.  எனவே, தெரு நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10- ஆவது வார்டு கவுன்சிலர் தேவி நாகரா ஜன் கோரிக்கை மனு வழங்கியும், பேரூராட்சி  கூட்டத்தில் வலியுறுத்தியும் பேரூராட்சி நிர்வாகம்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில், வியாழனன்று இரவு பழைய ஜெயங்கொண்டம் சோழபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் ஆடுகளை நாய்கள் கடித்ததால் அவை உயிரிழந்தன. இதுகுறித்து சுப்பிரமணி, 10-ஆவது வார்டு சிபிஎம் உறுப்பினர் தேவி நாகராஜனிடம் முறையிட்டார்.  இதனையடுத்து பேரூராட்சி நிர்வா கத்தை கண்டித்து பழையஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தேவி நாகராஜன் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார். பின்னர் அலுவலகத்தில் பணி யாற்றிய எழுத்தர், கவுன்சிலர் தேவி நாக ராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் உடனடியாக தெரு நாய்களை யும், வெறி நாய்களையும் பிடிப்பதற்கு பேரூ ராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக் கப்படும் என உத்தரவாதம் கொடுத்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.  சிபிஎம் கவுன்சிலருக்கு பாராட்டு இதனையடுத்து சனிக்கிழமை அனைத்து  பகுதிகளிலும் உள்ள தெரு நாய் மற்றும்  வெறிநாய்களை  பேரூராட்சி நிர்வாகத்தினர் பிடித்தனர்.   10-ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் தேவி  நாகராஜனின் தொடர் முயற்சியால் பேரூ ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.