districts

பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களை தமிழக அரசு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் சிஐடியு கரூர் மாவட்டக் குழு கோரிக்கை

கரூர், ஏப்.2 - சிஐடியு கரூர் மாவட்டத்  தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில், கோவிட் வார்டு களில் பணியாற்ற மருத்து வர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், பன் னோக்குப் பணியாளர் கள் என ஆயிரக்கணக்கா னோரை நேரடியாகவும், வெளிமுகமை அடிப்படையி லும் தமிழக அரசு நியமனம் செய்தது. அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் தங்கள்  உயிரையும் பொருட்படுத் தாது, கடந்த 2 வருடங்க ளாக பணியாற்றி, பலர் தொற்றுக்கு ஆளானது மட்டு மின்றி, உயிரையும் இழந்துள் ளனர். இவ்வாறு பணி யாற்றி வருவோருக்கு துவக் கத்தில் வெளிமுகமை ஒப்பந்தம் மூலம் ஊதியம் வழ ங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தேசிய சுகாதாரத் திட்டம் மூலம் ஊதியம் அளிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக அரசு தற்போது  தேவையைப் பொருத்து மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் ஆய்வக நுட்ப னர்களை பணியாற்ற அனு மதித்துள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளில் பணிபுரியும் பன்னோக்கு மருத்துவ மனைப் பணியாளர்களாக உள்ளவர்கள், கோவிட் வார்டு கள் என்ற வரையறையைத் தாண்டி, ஒட்டுமொத்த இதர  மருத்துவமனைப் பணிகளை யும் மேற்கொண்டு வருகிறார்கள். கரூர் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை யில், நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் இல்லாத நிலையில், தற் போது பன்னோக்குப் மருத்து வமனை பணியாளர்களாக உள்ளவர்கள், அதை ஈடு கட்டும் வகையில் பணி புரிந்து வருகிறார்கள்.

அவர் களுக்கு பணி நீட்டிப்பு தொடர்ந்து செய்யப்பட்டு வந்தும்கூட, திடீரென 1.4.2022-லிருந்து பணி நீட்டிப்பை தமிழக அரசு  வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மிகவும் மன உளைச்சல்களுக்கு ஆளாகி யுள்ளனர். அவர்களது எதிர்கால வாழ்க்கை நிலைமை  பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் 2021 டிசம்பர் முதல் கடந்த 4 மாத ஊதியமும் அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் குடும்பத்தை நடத்த பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இப்பிரச்சனையில் தொழி லாளர்களின் நலன் கருதி, தமிழக அரசு கரூர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில், பன்னோக்கு மருத்துவமனை பணியாளர் களாக ஒப்பந்த அடிப்ப டையில் கடந்த 2020 இல்  நியமிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து பணிபுரிய பணி நீட்டிப்பு செய்ய வேண்டும். அவர்க ளுக்கு வழங்கப்பட வேண்டிய 2021 டிசம்பர் முதல்  2022 மார்ச் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசும் சுகாதாரத் துறை நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.