districts

img

மாயனூர் காவல் ஆய்வாளரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன.9- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற விழிப்புணர்வு மாரத் தான் போட்டிற்கு மாயனூர் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். மேலும் வாலிபர் சங்க ஒன்றிய, மாவட்டத் தலை வர்களிடம் கரூர்-திருச்சி சாலையில் போதைக்கு எதி ரான விழிப்புணர்வு மராத்  தான் போட்டியை துவங்கக்  கூடாது என்று கட்டாயப்  படுத்தி எழுதி வாங்கியுள்ள னர்.  இதனையடுத்து அரசு பள்ளி மைதானத்தில் இந்த மராத்தான் போட்டி அமைதி யான முறையில் துவங்கி யது. ஆனால், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் சிங்கார வேலன், மாவட்டச் செயலா ளர் ஜி.பார்த்திபன், சிபிஎம்  கிருஷ்ணராயபுரம் ஒன்றியச்  செயலாளர் ஜி.தர்மலிங்கம் உள்ளிட்ட 7 பேர் மீது மாய னூர் காவல்துறையினர் பொய்  வழக்கு பதிவு செய்துள்ள னர்.  பொய் வழக்கை ரத்து  செய்யக் கோரியும், மாய னூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஸ், துணை ஆய்  வாளர் காளிமுத்து ஆகி யோரை கண்டித்தும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிருஷ்ணராயபுரம் ஒன் றியக்குழு சார்பில் கிருஷ்ண ராயபுரம் பேருந்து நிறுத்தத்  தில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ஜி.தர்ம லிங்கம் தலைமை வகித்தார். கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்  பி.ராஜூ, கே.சக்திவேல், இரா.முத்துச்செல்வன், பி. ராமமூர்த்தி, வாலிபர் சங்க  கரூர் மாவட்டச் செயலாளர் ஜி.பார்த்திபன் ஆகியோர்  கண்டன உரையாற்றினர். மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அச்சம் அடைந்த காவல்துறை
போராட்டத்திற்கு அச்சம் கொண்ட காவல்துறை ஒலி பெருக்கி அமைத்திட பல் வேறு இடையூறுகளை ஏற் படுத்தினர். ஒலிபெருக்கி வைத்துள்ளவர்களை நேரில் சென்று மிரட்டியுள்ளனர்.  இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு கூறுகையில், ‘‘வாலிபர் சங்க தலைவர்கள் மீது  போடப்பட்டுள்ள பொய்  வழக்கை உடனடியாக மாய னூர் காவல்துறையினர் வாபஸ் பெறவில்லை எனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படும்’’ என கூறினார்.